search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரிகள் இயங்கவில்லை"

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கவில்லை. #RIPKarunanidhi #Karunanidhideath #dmk

    புதுச்சேரி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

    நகரின் பிரதான சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தொழிற்பேட்டைகள் இயங்க வில்லை.

    சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுவை முழுவதும் ஆங் காங்கே தி.மு.க.வினரால் கருணாநிதியின் உருவப்படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. #RIPKarunanidhi  #Karunanidhideath #dmk

    ×